திருகோணமலையில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் !

You are currently viewing திருகோணமலையில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் !

திருகோணமலை பெரியகுளம் தமிழர்களின் பூர்வீக பகுதியில் இனவாத பிக்குகளாலும்,சிங்கள ஆக்கிரமிப்பாளர்களாலும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நோக்கோடு சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரை கட்டுமானத்திற்கு எதிராக இன்று மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று ( 03.09.2023) ஞாயிற்றுக்கிழமை காலை-(09) மணியளவில் சாம்பல்த்தீவு பாலத்தடியில் பெருமளவு மக்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இப்போராட்டத்தில்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உ றுப்பினருமான கஜேந்திரகுமார்-பொன்னம்பலம்,கட்சியின்பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன்,

மற்றும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜர்-காண்டீபன்,கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம்-சுரேஸ், ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம்-சுகாஸ்,மற்றும் திருகோணமலை மாவட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்களுடன் பெருமளவான இளைஞர்கள் பெண்கள், எனப் பலரும் கலந்துகொண்டு ஆக்கிரமிப்பு விகாரை கட்டுமானத்திற்கு எதிராக சுலோகங்களைத் தாங்கியவாறு
கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இதேவேளை இப் போராட்டத்தை தடுக்கும் நோக்கில் சிறீலங்கா காவல்த்துறையினரால் பெரும் தடைகள் ஏற்படுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருகோணமலையில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் ! 1

திருகோணமலையில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் ! 2

திருகோணமலையில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் ! 3திருகோணமலையில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் ! 4திருகோணமலையில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் ! 5திருகோணமலையில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் ! 6திருகோணமலையில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் ! 7 திருகோணமலையில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் ! 8

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments