சண்டிலிப்பாய் விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

You are currently viewing சண்டிலிப்பாய் விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் நேற்று ( 03.09.2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்த உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சில்லாலை கீரியான் தோட்டத்தைச் சேர்ந்த (20) அகவையுடைய பத்மநாதன்-வசீகரன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞன் பிரதான வீதியூடாக உந்துருளில் மிக வேகமாகப் பயணித்தவேளை குறுக்கு வீதிக்கு செல்வதற்கு மற்றுமொரு உந்துருளி திரும்பியபோது பின்னே வந்த இவரது உந்துருளி வேகத்தைக் கட்டுப்படுத்தி விபத்தைத் தவிர்க்க முயன்றதில் வீதியை விட்டு விலகி அருகே இருந்த தொலைபேசிக் கம்பத்துடன் பலமாக மோதியுள்ளது.

இதன்போது உந்துருளி உடைந்து பலத்த சேதமடைந்ததுடன் இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான விசாரணையை மானிப்பாய் காவல்த் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

சண்டிலிப்பாய் விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு 1

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments