தாயகப்பகுதியெங்கும் தொடர் விபத்துக்கள்!4பேர் பலி

You are currently viewing தாயகப்பகுதியெங்கும் தொடர் விபத்துக்கள்!4பேர் பலி

குறித்த சம்பவம் நேற்றுக் காலை 11.30 மணியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் மூதூர் – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுந்தரவதனன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

உழவு வேலைக்காக பாரதிபுரம் பகுதியில் இருந்து கிளிவெட்டி – தங்கநகர் நோக்கிச் சென்றபோது தங்கநகர் பகுதியில் உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்காலினுள் விழுந்ததால் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்த மூன்று பிள்ளையின் தந்தையான குறித்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இதன் போது அருகில் இருந்த நபர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை சேருநுவர சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கிச் பயணித்த பிக்கப் வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நுணாவில் பகுதி விடுதி ஒன்றின் உரிமையாளரான 35 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் பகுதியில் சனிக்கிழமை (30) நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

7 ஆம் வட்டாரம் சிவநகர் புதுக்குடியிருப்பு பகுதியினைச் சேர்ந்த இளைஞன்  கே.ரி.எம். மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதுயுடைய கஜலன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

முல்லைத்தீவு நந்திக்கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியை சேர்ந்த தர்மராசா நிசாந்தன் (வயது 33) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இளைஞன் நந்திக்கடலில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments