திருக்கோவில் துப்பாக்கிச் சூடு – இறப்பு 4 ஆக அதிகரிப்பு

You are currently viewing திருக்கோவில் துப்பாக்கிச் சூடு – இறப்பு 4 ஆக அதிகரிப்பு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சம்பவத்தில் காயமடைந்து மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு சிறீலங்கா காவல்த்துறைய அதிகாரி உயிரிழந்தார்.

இவற்றுடன் இந்தச் சம்பவதில் உயிரிழந்த சிறீலங்கா காவல்த்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 காவல்த்துறையினர் உயிரிழந்ததுடன், காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 காவல்த்துறையினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கூறப்படும் காவல் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தி ரி-56 ரக துப்பாக்கியுடன் எதிமலை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments