திலீபனின் நினைவு ஊர்தி சேதப்படுத்தியமையை கண்டித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் !

You are currently viewing திலீபனின் நினைவு ஊர்தி சேதப்படுத்தியமையை கண்டித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் !

தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதனைக் கண்டித்து திருகோணமலை – மூதூர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது  நேற்றைய தினம் (20.09.2023) மாலை 4.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் தலைமையில் திருகோணமலை மூதூர் பாலநகர்ச் சந்தியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.

மக்கள்திரள் கையில் பதாதைகளை தாங்கியவாறும் எதிர்ப்புக் கோஷங்களை வெளிப்படுத்தியவாறும் புளியடிச் சந்தி மணிக்கூட்டு கோபுரம்வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.

தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடாத்தியது மாத்திரமல்லாமல்   நாடாளுமன்ற  உறுப்பினர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியமை வன்மையான செயன்முறை  என்று மக்கள் தமது  கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

மேலும் இவ்விடயத்தில்  சர்வதேசமும்  அக்கறையுடன் செயற்பட வேண்டும் என  வலியுறுத்தியும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments