தீப் பிடித்து முற்றாக எரிந்தது பேரூந்து பயணிகளுக்கு பாதிப்பில்லை !

You are currently viewing தீப் பிடித்து   முற்றாக  எரிந்தது பேரூந்து பயணிகளுக்கு பாதிப்பில்லை !

யாழ்ப்பாணத்தில் இருந்து  நேற்று இரவு-(08) மணியளவில்
கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேரூந்து ஒன்று இன்று அதிகாலை  நீர்கொழும்பு ஊடாக சென்று கொண்டிருக்கையில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாற்றால் ஏற்பட்ட தீப் பரவலால் முற்றாக எரிந்து அழிவடைந்துள்ளது.

சம்பவம் இன்று அதிகாலை-(4.30)மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பேரூந்தில் 35,பேர் வரை பயணித்தனர் என்றும் ஓட்டுனரினதும், நடத்துனரினதும் துரித முயற்சியால் பயணித்த எவருக்கும் உயிர்சேதமோ, காயமோ, ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தீ ” வேகமாகப் பரவுவதற்கு முன்பேஅனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் பெரும்பாலான உடமைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து மீண்டும் வெளி நாட்டிற்குத் திரும்புவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு சென்ற பயணிகளை ஏற்றிச் செல்கையிலையே பேரூந்து இவ் அனர்த்தத்தை சந்தித்துள்ளது.

எனினும் பயணிகள் உடனடியாகவே விமான நிலையத்திற்கு வேறு வாகனம் ஊடாக பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப் பிடித்து முற்றாக எரிந்தது பேரூந்து பயணிகளுக்கு பாதிப்பில்லை ! 1

 

தீப் பிடித்து முற்றாக எரிந்தது பேரூந்து பயணிகளுக்கு பாதிப்பில்லை ! 2

தீப் பிடித்து முற்றாக எரிந்தது பேரூந்து பயணிகளுக்கு பாதிப்பில்லை ! 3

தீப் பிடித்து முற்றாக எரிந்தது பேரூந்து பயணிகளுக்கு பாதிப்பில்லை ! 4

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments