தென்கொரியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,313 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing தென்கொரியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,313 ஆக உயர்வு!

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,313 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியா மற்றும் ஈரானில் வேகமுடன் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தென் கொரியாவில் மேலும் புதிதாக 272 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 7,313 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் சுமார் 100,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 3,600 ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள