தேராவில் பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம் வாளுடன் ஒருவர் கைது!

You are currently viewing தேராவில் பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம் வாளுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் தாங்கமுடியாத நிலையில் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்னிலையில் வாளுடன் நடமாடிய குழுவினை சேர்ந்த ஒருவரை தேரால் கிராம மக்கள் மடக்கி பிடித்து பொலீசில் ஒப்படைத்துள்ளார்கள்.
சனி,ஞாயிறு நாட்களில் வாள்வெட்டு குழுவின் தொல்லை தாங்கமுடியாத நிலை  காணப்படுவதாகவும் இரவ நேரங்களில் விதவைப்பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளும் வாள்வொட்டு குழு வீட்டிற்கு வரவா இல்லை உன் மகளை கடத்துவோன் அல்லது மகளுக்கு கை எடுப்போன் என மிரட்டல் விடுவதாகவும் இவ்வாறு கதப்பவர்களின் ஒலி வடிவங்கள் பதிவு செய்யப்பட்டு பொலீசாருக்கு கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில்.
இன்று(15.11.2020) காலை வாளுடன் வெட்ட வந்தவர்களை பிடித்த கிராம இளைஞர்கள் அதில் ஒவரை பிடித்து வீட்டில் கட்டிவைத்து  பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
தேராவில்  கிராமத்தினை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக வாள்களுடன் நடமாடுவதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
வாளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள