தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பமானது !

You are currently viewing தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பமானது !

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து சட்டவிரோதமாகக் கட்டப்பட்டடுள்ள திஸ்ஸ என்ற சட்ட விரோத விகாரையை அகற்றக்கோரியும்,விகாரைக் காணியுடன் இணைத்து ஆக்கிரமிக்கப் பட்டுள்ள பல பரப்புக்களைக் கொண்ட மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைக்கக் கோரியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் எதிர்ப்புப் போராட்டம் இன்று (27.10.2023) வெள்ளிக்கிழமை எட்வாவது தடவையாக தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பான பகுதியில் ஆரம்பமாகி நடைபெற்ற வண்ணம் உள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம்-சுகாஸ் தலைமையில் இன்று பிற்பகல்-04, மணிக்கு ஆரம்பமான இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு நாளை பிற்பகல்-05, மணிக்கு நிறைவடையவுள்ளது.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பமானது ! 1

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பமானது ! 2

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பமானது ! 3

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments