தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இடம்பெற்ற பெரும் போராட்டம் !

You are currently viewing தையிட்டி  சட்டவிரோத விகாரைக்கு எதிராக இடம்பெற்ற பெரும் போராட்டம் !

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளைக் கையகப்படுத்தி ஆக்கிரமிப்புச் செய்து சட்டவிரோதமாக அமைத்துள்ள திஸ்ஸ என்ற விகாரையை அகற்றக்கோரியும்,

விகாரையுடன் இணைத்து கையகப் படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கக்கோரியும் நேற்று முன் நாள், செவ்வாய்க்கிழமை (29.08.2023) மற்றும் நேற்று புதன்கிழமை (30.08.2023) ஆகிய இரு நாட்களும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் தையிட்டி சட்டவிரோத விகாரை முன்பாக கடும் கண்டன எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்-பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன் கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள்,செயற்பாட்டாளர்கள்,மற்றும் காணிகளின் உரிமையாளர்கள், கிராம மக்கள், இன உணர்வாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அது தொடர்பிலான போராட்டகள நேற்றைய நாள் புகைப்படங்கள் மற்றும் காணொளி இணைப்பு.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இடம்பெற்ற பெரும் போராட்டம் ! 1

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இடம்பெற்ற பெரும் போராட்டம் ! 2

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இடம்பெற்ற பெரும் போராட்டம் ! 3

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இடம்பெற்ற பெரும் போராட்டம் ! 4

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இடம்பெற்ற பெரும் போராட்டம் ! 4\

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments