தொல்லியல் கொடுத்தது பொய் அறிக்கை- தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு!

You are currently viewing தொல்லியல் கொடுத்தது பொய் அறிக்கை- தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு!

வெடுக்குநாறிமலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்;

வெடுக்குநாறி ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட எட்டு அப்பாவி சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை (13) அழைக்கப்பட்டது. காலையிலிருந்து பெரும் சட்டப்போரட்டமாகவே அது அமைந்திருந்தது. இருப்பினும் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தவிடயம் தொடர்பாக நாம் மேன்முறையீடு செய்யவுள்ளோம்.

அந்த எட்டுபேர் மீதும் எந்தவிதமான தவறும் கிடையாது.அவர்களுக்கு நீதி கிடைக்கின்றவரை நாம் தொடர்ச்சியாகப் போராடுவோம்.

இந்த சந்தேக நபர்கள் தொல்லியல் சின்னங்களிற்குச் சேதத்தினை ஏற்படுத்தியதாக தொல்லியல் திணைக்களத்தால் உண்மைக்குப் புறம்பான ஒரு பொய்யான அறிக்கையினை நீதிமன்றிலே தாக்கல்செய்துள்ளது.

உண்மையில் அவ்வாறான எத்தகைய சேதங்களும் ஏற்ப்பட்டிருக்கவில்லை. அதனை நாம் மேன்முறையீட்டிலும் விளக்கத்தின் போது நிரூபிப்போம். என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments