நண்பியுடன் கடலில் நீராட சென்ற சிறுமி உயிரிழப்பு!

You are currently viewing நண்பியுடன் கடலில் நீராட சென்ற சிறுமி உயிரிழப்பு!

தனது நண்பியுடன் கடலில் நீராட சென்ற 11 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சாட்டி பகுதியை சேர்ந்த அவந்திகா விஜயகாந்த் (வயது 11) எனும் சிறுமியை உயிரிழந்துள்ளார்.

சிறுமியும் , அவரது நண்பியும் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சாட்டி கடலில் நேற்றைய தினம் சனிக்கிழமை நீராடிக்கொண்டிருந்த வேளை , சிறுமி கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

உடனடியாக நண்பி கரையில் நின்றவர்களுக்கு தகவல் அளித்த போது , கடலில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை மீட்க முயற்சிகள் எடுத்த போதிலும் , சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments