நீண்டகால போருக்கு தயாராகும் புதின்: அமெரிக்க உளவுத்துறை!

You are currently viewing நீண்டகால போருக்கு தயாராகும் புதின்: அமெரிக்க உளவுத்துறை!

உக்ரைனில் போர் தொடுத்துள்ள ரஷியா தற்போது கிழக்கு பிராந்தியமான டான்பாசில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு

மே 12, 04.13 a.m

ரஷிய ராணுவம் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பெல்கொரோட் கவர்னர் தெரிவித்துள்ளார்

மே 12, 04.05 a.m

வெரேஷ்சுக்: காயமடைந்த அசோவ்ஸ்டல் பாதுகாவலர்களுக்கு ரஷிய போர்க் கைதிகளை பரிமாறிக்கொள்ள உக்ரைன் வழங்குகிறது.

“இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறினார்.

மே 12, 03.56 a.m

ரஷிய ஏவுகணை தாக்குதலில் கார்கிவ் மாகாணத்தில் பலர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய தாக்குதலில் லோசோவா நகரில் உள்ள விவசாயக் கிடங்கு அழிந்து, ஒரு குடிமகன் கொல்லப்பட்டதாக மேயர் செர்ஹி ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

மே 12, 03.34 a.m

பிடிபட்ட ரஷியர் மீது உக்ரைன் முதல் போர்க்குற்ற விசாரணையை நடத்த உள்ளது

கிழக்கு மற்றும் தெற்கில் சண்டை மூண்டது மற்றும் கிரெம்ளின் படையெடுப்பின் ஆரம்பத்தில் கைப்பற்றிய நாட்டின் ஒரு மூலையை இணைக்கும் சாத்தியத்தை மகிழ்வித்ததால், கைப்பற்றப்பட்ட ரஷிய சிப்பாயின் முதல் போர்க்குற்ற விசாரணைக்கான திட்டங்களை உக்ரைனின் உயர்மட்ட வழக்குரைஞர் நேற்று வெளியிட்டார்.

மே 12, 02.27 a.m

ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்புக்குப் பிறகு முதல் முறையாக அந்த நாட்டு கால்பந்து அணி விளையாடியது

ரஷியாவின் படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனின் தேசிய கால்பந்து அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று விளையாடியது, போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்ட நட்பு ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மன் கிளப் பொருசியா மொயன்செங்லாட்பாக்கை தோற்கடித்தது.

பிப்ரவரி 24 அன்று ரஷியாவிடமிருந்து தாக்குதலுக்கு உள்ளான ஒரு நாட்டிற்கு ஆதரவான செய்தியை வெளியிடுவதில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உக்ரேனியக் கொடிகளை அசைத்து, வீரர்களுடன் இணைந்து கொண்டாடினர்.

மே 12, 01.10 a.m

போரினால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் ராணுவம் பல்வேறு இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவை அந்நாட்டு ராணுவம் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே, மரியுபோல் நகரத்தை உக்ரைன் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மே 12, 12.38 a.m

உக்ரைனில் நீண்டகால போருக்கு புதின் தயாராகிறார் – அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல்

உக்ரைனில் நீண்ட கால போருக்கு ரஷிய அதிபர் புதின் தயாராகி வருகிறார் என அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் போரில் ரஷியாவின் கவனம், இப்போது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றியாக வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் அங்கு பல நகரங்கள், கிராமங்களை ரஷியா கைப்பற்றியது.

ஆனால் இப்போது கார்கிவ் நகருக்கு அருகே 4 கிராமங்களில் ரஷிய படைகளை உக்ரைன் படைகள் விரட்டியடித்து வசப்படுத்தி உள்ளன. இதை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தி உள்ளார். இதுபற்றி உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா கூறுகையில், “இது கிழக்கில் ரஷியாவின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் படையினருக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது” என குறிப்பிட்டார்.

மரியுபோல் நகரின் அஜோவ் உருக்காலையை பிடித்து, அந்த நகரை முற்றிலுமாய் கைப்பற்றி விட வேண்டும் என்ற ரஷியாவின் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் அந்த ஆலை மீது ரஷிய படைகள் 34 முறை தாக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அந்த ஆலையில் இருந்து பொதுமக்களை ஐ.நா. சபையும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து வெளியேற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்னும் பொதுமக்களில் 100 பேர் அந்த ஆலையின் சுரங்கங்களில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளியேற்றத்துக்காக ரஷியாவினால் தேர்வு செய்யப்படாத பொதுமக்கள்தான் இன்னும் அந்த உருக்காலை சுரங்கங்களில் உள்ளனர் என டொனெட்ஸ்க் பிராந்திய கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்தார்.

மரியுபோல் அஜோவ் உருக்காலைக்குள் காயங்களுடன் உள்ள வீரர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. காயங்களுடன் போராடிக்கொண்டிருக்கிற வீரர்களை அங்கிருந்து வெளியேற்றி, உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அனுப்ப உதவ வேண்டும் என்று ஐ.நா.வுக்கும், செஞ்சிலுவை சங்கத்துக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கான ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதன் வினியோக பாதைகளையும், மேற்கத்திய ஆயுத ஏற்றுமதியையும் சீர்குலைக்கும் வகையில் ஒடேசாவின் முக்கிய துறைமுகம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன.

அதே நேரத்தில் உக்ரைன் மீதான போரில் ரஷியா இதுவரை 10 படைத்தளபதிகளை இழந்துள்ளதாக அமெரிக்க ராணுவ உளவு அமைப்பின் இயக்குனர் ஸ்காட் பெரியர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் நீண்ட போருக்கு ரஷிய அதிபர் புதின் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமாகி வருகிற நிலையில், அந்த பிரதேசத்தை முழுமையாக கைப்பற்ற ரஷியா முயற்சிக்கிறது, கிழக்கில் வெற்றி பெற்றாலும், சண்டையை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸ் எச்சரித்துள்ளார்.

இதுபற்றி அவர் அமெரிக்க செனட் குழுவிடம் பேசும்போது, “டான்பாஸ் பிராந்தியத்துக்கு அப்பாலும் இலக்குகளை அடைய ரஷிய அதிபர் புதின் விரும்புகிறார். ஆனால் தனது லட்சியங்களுக்கும், ரஷியாவின் தற்போதைய வழக்கமான ராணுவ திறன்களுக்கும் இடையே பொருந்தாத தன்மையை அவர் எதிர்கொள்கிறார். போர் தொடர்வதால் ரஷிய அதிபர், மிகவும் கடுமையான வழிமுறைகள் பக்கம் திரும்ப இது வழிவகுக்கும்” என்று எச்சரித்தார். இது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு போர் உதவி நிதியாக 40 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சம் கோடி) நிதி உதவி வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இது உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகள் செய்வதற்கு பயன்படும்.

ஐரோப்பிய வீடுகளுக்கு ஒரு மையத்தின் மூலம் ரஷியா செய்து வந்த சமையல் எரிவாயு வினியோகத்தை உக்ரைன் நிறுத்தியது. ஆனால் இதன் தாக்கம்பற்றி உடனடியாக தகவல் இல்லை. கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்களை முடக்கி உள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments