நோர்வேயில் எகிறும் கொரோனா தொற்று!

You are currently viewing நோர்வேயில் எகிறும் கொரோனா தொற்று!

நோர்வேயில் மீண்டும் கடுமையான கொரோனா தொற்று ஏற்ப்பட்டு வருகின்றது. அரசால் கடுமையான கொரோன விதிமுறைகள் விதிக்கப்பட்டபோதும் நேற்றுமட்டும் 1150 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது ஒஸ்லோ மாநகரில் மட்டும் இதுவரைகாலமும் இல்லாத கொரோனா தொற்றில் 495பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அதிக தொற்றுக்காரணமாக 5 ம் வகுப்பிற்கு மேல் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதேவேளை இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் மேலதிகமான இறுக்கமான நிலைப்பாடு அரசாங்கத்தால் முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள