நோர்வே நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பரிந்துரை!

You are currently viewing நோர்வே நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பரிந்துரை!

“கொரோனா” பரவலின் காரணமாக, நோர்வேயில் நாடு முழுவதும் நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றங்களின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

எனினும், சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய விடயங்கள், நீதித்துறைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய விடயங்கள் மற்றும் உயிருக்கும் சுகாதாரத்துக்கும் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய விடயங்களை தொடர்ந்து கவனித்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்குகளை மூடிய அறைகளுக்குள் நடாத்தும்படியும், பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கும் அதே வேளையில், “கொரோனா” தொடர்பாக விழிப்பாகவும் இருக்கும்படியும் நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள