“பிணைக் கைதிகளுக்கு மரண தண்டனை” – இஸ்ரேலை எச்சரித்த ஹமாஸ்!

You are currently viewing “பிணைக் கைதிகளுக்கு மரண தண்டனை” – இஸ்ரேலை எச்சரித்த ஹமாஸ்!

பிணைக் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா அறிக்கை வெளியிட்டுள்ளார், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை குறிவைத்து தொடர் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேலின் இந்த தாக்குதலில் இதுவரை காசாவில் 1100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அபு ஒபைடா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,

அதில், பாலஸ்தீன மக்களுக்கு எச்சரிக்கை வழங்காமல் இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை கொலை செய்வோம்.

மேலும் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் வீடியோ மற்றும் ஆடியோக்களை ஒளிபரப்புவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments