பெண் போராளிகளை ஒத்த ஆடைகளை அணிந்திருந்த சிறுவர்கள்! – 6 பேரிடம் சிங்கள காவற்துறை விசாரணை!

You are currently viewing பெண் போராளிகளை ஒத்த ஆடைகளை அணிந்திருந்த சிறுவர்கள்! – 6 பேரிடம் சிங்கள காவற்துறை விசாரணை!

மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள் போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து இருந்தனர் என சில புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.

அவை தொடர்பில் கோப்பாய் சிங்கள காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , படங்களில் இனம் காணப்பட்ட சிறுவர்களின் பெற்றோரை சிங்கள காவற்துறை நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

வாக்கு மூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுக்க உள்ளதாகவும் , எவரையும் இது வரையில் தாம் கைது செய்யவில்லை எனவும் கோப்பாய் சிங்கள காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments