போராட்டக்காரர்களை மிரட்டும் சரத்வீரசேகர!

You are currently viewing போராட்டக்காரர்களை மிரட்டும் சரத்வீரசேகர!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்வோம்  என   சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பேரணியில் கலந்துகொண்டவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து அவர்களைச் சிறையில் அடைப்போம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களிடம் பேரணியில் கலந்துகொண்டோரின் படங்கள் மற்றும் வாகனங்களின் படங்கள் உள்ளதால் இந்தத் தனிநபர்களுக்கு எதிராக நாங்கள் சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவோம்.

இந்தப் பேரணி தொடர்பில் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அடுத்த சில நாட்களில் வழக்குகளைத் தாக்கல் செய்யவுள்ளோம். இதேவேளை, சுமந்திரனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அதனால்தான் அவருக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பையும் விலக்கிக்கொண்டோம்” – என்றார்.

பகிர்ந்துகொள்ள