போலிப்பணத்துடன் அகப்பட்ட குடும்பஸ்தர்!

You are currently viewing போலிப்பணத்துடன் அகப்பட்ட குடும்பஸ்தர்!

கிளிநொச்சியில் எட்டு இலட்சத்துப் பத்தாயிரம் ரூபா மதிப்புள்ள 1000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் சிறீலங்கா காவல்த்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி காவல்த்துறை விசேட பிரிவுக்குக் கிடைத்த தகவலிற்கு அமைவாக நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் போலி நாணயத்தாள்களை சந்தேகத்திற்கிடமான வகையில் பையில் எடுத்துச் செல்லப்படுகின்றமை தொடர்பில் காவல்த்துறை விசேட பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து காவல்த்துறை விசேட பிரிவினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்துக் குறித்த சந்தேகநபரை காவல்த்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பையில் சுமார் 8 லட்சத்திற்கு அதிக பெறுமதி கொண்ட போலி நாணயத்தாள்கள் காணப்பட்டுள்ளது. அதனை மீட்ட சிறீலங்கா காவல்த்துறை சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச்சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை எனவும், சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments