மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் !

You are currently viewing மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் !

இறுதிப்போரின் போது சிறிலங்கா படைகளிடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிவரும் உறவுகளால் மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளது.

பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான எதிர்வரும்- 30,ம் நாள் மன்னாரில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டம் மன்னார் சதொஷ மனிதப் புதைகுழி முன்பாக ஆரம்பமாகி நடைபெறவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் நேற்றைய நாள் (24.08.2023) வியாழக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில்
நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments