மருதங்கேணியில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

You are currently viewing மருதங்கேணியில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் சனிக் கிழமை கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். மீன்பிடிப்பதற்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போன நிலையில் இரண்டு நாட்களாக சிறீலங்கா கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் தேடி வந்தனர். இந்நிலையில் மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய சின்ராசா என்று அழைக்கப்படும் முத்துச்சாமி தவராசா என்னும் குடும்பஸ்தரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது.

விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments