வெடுக்குநாறிமலை அராஜகத்தைக் கண்டித்து திருகோணமலையில் போராட்டம்!

You are currently viewing வெடுக்குநாறிமலை அராஜகத்தைக் கண்டித்து திருகோணமலையில் போராட்டம்!

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை சிவன் ஆலயத்தில் வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்யக்கோரியும் அச் சம்பவத்தைக் கண்டித்தும் திருகோணமலை சிவன்கோவிலுக்கு முன்னால் நேற்று மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது .

இதனை சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

வழிபாடு எமது அடிப்படை உரிமை ஆதி சிவன் ஆலயம் எமது பூர்வீகம்,ஈழத்தின் சமயத் தலைவர்களை அபகரிக்காதே தொல்பொருள் எனும் போர்வையில் பௌத்தத்தை விதைக்காதே, வழிபாட்டைத் தடுக்கும் உரிமையைக் காவல் துறையினருக்கு கொடுத்தது யார்,ஆலய நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்,ஆலயங்கள் சைவத் தமிழர்களின் பூர்வீக அடையாளம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதில் சுமார் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற புனிதமான சிவராத்திரி நாளில் இடம் பெற்ற சம்பவம் அடக்குமுறையானது இதனை காவல் துறையினர் மேற்கொண்டமை கண்டிக்கத்தக்கது என தென்காயிலை ஆதீனம் அகத்தியார் அடிகளார் தெரிவித்தார்.

திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் நாங்கள் வழிபாட்டில் ஈடுபடும் போது இவ்வாறான விடயங்களை மேற்கொள்வது நல்லதல்ல. இந்த நாட்டிற்கு ஒரு சமுதாயத்திற்கு ஏற்றதல்ல இறைவனை வழிபடும் போது அடக்குமுறையான நிகழ்வு சைவத்திற்கு மட்டுமல்ல முழு சமூகத்திற்கும் ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

வெடுக்குநாறிமலை அராஜகத்தைக் கண்டித்து திருகோணமலையில் போராட்டம்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments