முன்னாள் பெண் போராளி மீது தாக்குதல்!

You are currently viewing முன்னாள் பெண் போராளி மீது தாக்குதல்!

கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வந்த மூன்று மாவீரர்களின் சகோதரியும், இறுதிப்போரில் கணவன் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியுமான எழில்வேந்தன் கோணேஸ்வரி தாக்கப்பட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் வசித்த வந்த வீடும் உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து மரணித்த எனது மூன்று சகோதரர்களில் ஒருவர் வாங்கிய காணியில்தான் நான் வசித்து வந்தேன். அரசியல் பின்புலத்தில் தொடர்ச்சியாக குறித்த காணியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் நான் தொடர்ச்சியாக குறித்த காணியில் வசித்து வந்தேன்.

அவ்வவ்போது மாத்தளையிலிருந்து காணியை இயக்கத்திற்கு விற்பனை செய்துவிட்டு சென்றவர் என ஒருவரை வைத்து எனக்குக் கடும் நெருக்கடி கொடுப்பட்டது. இந்தநிலையில் வியாழக்கிழமை கிளிநொச்சி பொலிஸாரின் ஆதரவுடன் சிலர் நான் குடியிருக்கும் காணிக்குள் நுழைந்து வேலியைப் பிரித்து எறிந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தபோது நான் எதிர்த்து நின்றேன். இதன்போது நான் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளேன். எனது வீட்டு உடமைகள் வீதியில் எறியப்பட்டுள்ளன. வசித்த வீடும் உடைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினால் எங்கு செல்வேன் என்றே தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன் நள்ளிரவில் எனது தொலைபேசி அழைப்புக்குத் தொடர்புகொண்ட உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் கொத்துரொட்டி கட்டிக்கொண்டு வரட்டா எனக் கேட்ட விடயத்தை நான் அம்பலப்படுத்திய நாள் முதல் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றேன்.

பகிர்ந்துகொள்ள