முல்லைத்தீவில் பாரிய போராட்டம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவிப்பு!

You are currently viewing முல்லைத்தீவில் பாரிய போராட்டம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவிப்பு!

எதிர்வரும் 08 ஆம் திகதி முல்லைத்தீவு பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று  (06.03.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 8 ஆம் திகதி சர்வதேச மகளீர்தினம் மற்றும் 55 ஆவது ஜக்கியநாடுகள் சபைக்கூட்டத்தொடர் நடைபெற்றவுள்ளது.

இந்த நிலையில் பெண்கள் ஆகிய நாங்கள் எங்கள் உறவுகளை தேடிவருவதுடன் அடிமைத்தனமாகவே இலங்கையில் வாழ்ந்து வருகின்றோம் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 08 ஆம் திகதி பாரிய போராட்டம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தாமதமாகி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

மேலும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் அதற்கான நிதி உதவியினை அரசாங்கம் செய்யவேண்டும் என்பதுடன் அந்த மனித எச்சங்கள் யார் என்பதை கண்டுபிடித்து அதற்கான தீர்வு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments