முல்லைத்தீவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி !

You are currently viewing முல்லைத்தீவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி !

breaking

முல்லைதீவு – அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(11.03.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது கரிப்பட்டமுறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த 62 வயதுடைய முத்துத்தம்பி கிருஸ்ணசாமி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் முல்லைதீவு அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் பகல் வேளை வீதியால் சென்று கொண்டிருந்த போதே யானை தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி S.H.மஹ்ரூஸ் சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்று பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

கரிப்பட்டமுறிப்பு, அம்பகாமம், ஒலுமடு உள்ளிட்ட பகுதிகளில் பகல் வேளைகளில் யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதனால் விவசாயிகளும் பாடசாலை மாணவர்களும் வீதிகளில் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பாக யானையின் தாக்கத்தால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments