மேலும் 15 இலங்கை தமிழர்கள் தமிழகம் வருகை!

You are currently viewing மேலும் 15 இலங்கை தமிழர்கள் தமிழகம் வருகை!

கடும் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 15 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இலங்கையில் பணவீக்கம், கையிருப்புக் குறைவு, அந்நிய செலாவணி, சுற்றுலாத்துறை முடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரலாறு காணாத பொருளாதார ஏற்பட்டுள்ளது. விலைவாசிகள் வின்னை முட்டும் அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களான மருந்துகள், பால், மாவு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கை மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். அதேசமயம் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு தனுஷ்கோடியை அடைவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இருந்து மேலும் 3 சிறுவர்கள் உட்பட 15 பேர் தனுஷ்கோடி வருகை புரிந்துள்ளனர். பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோவில் பகுதிக்கு வந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இருந்து தொடர்ந்து தமிழர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதுவரை இலங்கையில் இருந்து 50ற்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments