யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதுவர் – சிவில் சமூகத்துடன் சந்திப்பு!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதுவர் – சிவில் சமூகத்துடன் சந்திப்பு!

யாழ்ப்பாணம் வந்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் சிவில் சமூக பிரதிநிதிகளை நேற்று சந்தித்துப் பேசினார். அமெரிக்கத் தூதுவர் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளுக்காக வாதிடுவதன் மூலம் சிவில் சமூகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து விவாதிப்பதற்கும் ஜனநாயக இலங்கைக்கான எமது ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதற்கும் நான் யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகத் தலைவர்களைச் சந்தித்தேன் என இச்சந்திப்புக் குறித்து அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியோன் சங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் அவர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments