யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா!

You are currently viewing யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோனையின் போது அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்பின் அவர் மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தற்போது மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள