யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூட பரிசோதனையில் உடுவிலை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதியானது.

அதேவேளை, யாழ் மருத்துவப்பீட ஆய்வுக்கூடத்தில் நேற்று 98 பேரின் பிசிஆர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட போது ஏழாலையை சேர்ந்த 3 பேருக்கும் இணுவிலை சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள