யாழ்ப்பாணத்தில் 8 பேருக்கு கொரோனா!!தாதி, ஊழியர்கள் நால்வர்உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்பட்டுள்ளனர்.

You are currently viewing யாழ்ப்பாணத்தில் 8 பேருக்கு கொரோனா!!தாதி, ஊழியர்கள் நால்வர்உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி,சாவகச்சேரி வைத்திய அதிகாரி பிரிவில் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேர், வைத்தியசாலையில் ஒருவர் என ஐந்து பேருக்கும், வேலணை வைத்திய அதிகாரி பிரிவில் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கும்,முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை

அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையின் வைத்தியர், தாதி, ஊழியர்கள் நால்வர் உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று கடந்தவாரம் வீடு திரும்பியிருந்த ஒருவர் மீண்டும் நோய் அறிகுறி காணப்பட்ட நிலையில் இன்று அச்சுவேலி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டமையை அடுத்து நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments