யாழ்ப்பாணம்- கொக்குவில் பகுதியில் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்!

You are currently viewing யாழ்ப்பாணம்- கொக்குவில் பகுதியில்  மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்!

யாழ்ப்பாணம்- கொக்குவில் பகுதியில் 2வது மாடி கட்டிடத்தில் வேலை செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று நடந்த இச்சம்பவத்தில் இளவாலை – பெரியவிளான் பகுதியை சேர்ந்த சூசை சுதர்சன் (வயது 38) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தார்.

குறித்த நபர் திங்கட்கிழமை வேலை செய்து கொண்டிருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments