யாழ்.அரியாலையில் போதைப்பொருள் விற்கும் பெண்கள்!

You are currently viewing யாழ்.அரியாலையில் போதைப்பொருள் விற்கும் பெண்கள்!

யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொதியினை கைப்பற்றிய சிறீலங்கா காவல்த்துறையினர், பெண்ணை கைது செய்துள்ளனர்.

அரியாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குடும்ப பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பெண் சிறீலங்கா காவல்த்துறையினரால் கண்காணிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் கஞ்சா போதைப்பொருளை வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்யும் தருணம் உபகாவல்த்துறை பரிசோதகர் தலைமையிலான குழுவினர் குறித்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

இதன்போது விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொதியினை அப் பெண்ணின் உடமையில் இருந்து காவல்த்துறை மீட்டதுடன் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் அரியாலை பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் என சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் போதை பொருள் விற்பனையில் பெண்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ள நிலையில் கடந்த 6 மாத காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் 8 பெண்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments