பளை விபத்தில் உடுத்துறைப்பெண் பலி!

You are currently viewing பளை விபத்தில் உடுத்துறைப்பெண் பலி!

பளை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துச் சம்பவத்தில் உடுத்துறை வடக்கு தாளையாடி பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் தவமலர்(60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு திரும்ப முற்பட்ட போது மோட்டார் சைக்கிளின் மீது பேருந்து மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments