யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேருக்கு வகுப்பு தடை!!

You are currently viewing யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேருக்கு வகுப்பு தடை!!

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற மாணவர்களின் முரண்பாட்டுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 21 மாணவர்களிற்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.

கலைப்பீடத்தின் 2ஆம், 3ஆம் வருடங்களை சேர்ந்த மாணவர்களே வகுப்பு தடைக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று இரவு மாணவர்களிற்கு வகுப்பு தடை அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது..

ஆனால் இத்தடையானது மாணவர்களின் கல்வியை சிதைக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது அண்மைக்காலமாக பல்கலைக்கழகமாணவர்கள் மீது கண்வைத்துள்ள சிறீலங்கா அவர்களுக்குள் குழப்பத்தை உருவாக்கி இப்படியான தடைகளுக்கு ஊடாக அவர்களின் ஒன்றிணைவையும் கல்வியையும் சிதைக்கலாம் என்ற நோக்கிலேயே செயற்பட்டுவருவாதக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள