யாழ்.வளலாய் கடற்பரப்பில் வைத்து சிறீலங்கா கடற்படையினரால் 13 பேர் கைது!

You are currently viewing யாழ்.வளலாய் கடற்பரப்பில் வைத்து சிறீலங்கா  கடற்படையினரால் 13 பேர் கைது!

சட்டவிரோதமாக இந்தியா செல்வதற்கு முயன்ற  தென் தமிழீழம் திருகோணமலையை  சேர்ந்த 13 பேர் நேற்றிரவு யாழ்.வளலாய் கடற்பரப்பில் வைத்து சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் பயணித்த ஒரு டிங்கி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சிங்கள கடற்படையினரின் விசாரணையின் பின்னர் அவர்கள் பலாலி சிறீலங்கா காவல் நிலையத்தில் கையளிக்கப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களில் ஆண்கள் 05, பெண்கள் 03, சிறுவர்கள் 05 என மொத்தமாக 13 பேர் என தெரியவருகின்றது.

1 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments