ரஷ்யாவை எரிச்சலூட்டும் நாட்டோ நாடுகள்!

You are currently viewing ரஷ்யாவை எரிச்சலூட்டும் நாட்டோ நாடுகள்!

உக்ரைன், பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நோட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை கூட்டம் ஜூன் 15 மற்றும் 16ம் திகதிகளில் நடைப்பெறும் என நோட்டோ அறிவித்துள்ளது. ரஷ்யாவின் அண்டை நாட்டு பிராந்தியங்களில் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோ விரிவாக்கப்படுவதை எதிர்த்து உக்ரைன் மீதான போரை 92வது நாளாக ரஷ்யா முன்னெடுத்து வருகிறது.

இந்தநிலையில் உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து, ரஷ்யாவின் மற்ற அண்டைநாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்விடன் அகிய நாடுகளும் தற்போது மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தையும் அளித்துள்ளனர்.

ஏற்கனேவே மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் உக்ரைன் இணைய விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில் தான் அந்த நாட்டின் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கியது ஆனால் தற்போது பின்லாந்து, மற்றும் ஸ்வீடன் நாடுகளும் ராணுவ கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருப்பது ஐரோப்பிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், ரஷ்யாவை சீண்டிப்பார்க்கும் விதமாக உக்ரைன், பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நோட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை கூட்டம் ஜூன் 15 மற்றும் 16ம் திகதிகளில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நடைப்பெறும் என நோட்டோ அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் அண்டை நாடுகளை மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பிற்குள் இழுக்கும் நடவடிக்கைகளுக்கு ரஷ்யா தொடர்ந்து எச்சரிக்கைகள் தெரிவித்து கொண்டிருந்தும், நோட்டோ அமைப்பில் இல்லாத உறுப்பு நாடுகளுடன் இணைந்து நோட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருப்பது கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments