வடக்கிலும் எகிறும் கொரோனா!

You are currently viewing வடக்கிலும் எகிறும் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பியவர்கள்.

அந்த இறுதிச் சடங்கில் பங்குபற்றிய சிலருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இந்த மூவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள பண்ணாகத்தில் ஒரே குடும்பத்தில் நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தில் வயோதிபப் பெண்ணுக்கும் மாணவன் ஒருவருக்கும் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது.

அத்துடன் அச்சுவேலி வியாபாரியின் குடும்பத்தில் ஏற்பட்ட தொற்றால் மேலும் ஒருவருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் மாந்தை மேற்கில் 4 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 24 பேருக்கு தொற்று உள்ளமை கடந்த வாரம் கண்டறிப்பட்ட நிலையில் இவர்கள் நால்வரும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். என்றும் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள