வடபகுதி மீனவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பேரணி!

You are currently viewing வடபகுதி மீனவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பேரணி!

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி, வடக்கு மாகாண மீனவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பேரணி நடத்தவுள்ளனர் என்று அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பேரணியில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

இன்று காலை 10:30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பு ஆரம்பமாகும் இந்தப் பேரணில் இலங்கை ஜனாதிபதிக்கான மகஜரை வடக்கு மாகாண ஆளுநர் ஊடாகவும், இந்தியப் பிரதமருக்கான மகஜரை இந்தியத் துணைத் தூதுவர் ஊடாகவும் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments