வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கைது !

You are currently viewing வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கைது !

யாழ்.வடமராச்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான
-சிவானந்தராசா-சிவநேசன் மருதங்கேணி சிறிலங்கா காவல்த் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இன்று (01.10.2023) ஞாயிற்றுக்கிழமை இரவு-08, மணிக்கு இடம்பெற்றுள்ளது.

திடீரென அவரது வீட்டிற்கு வந்த மருதங்கேணி சிறீலங்கா காவல்த்துறையினர் காரணம் எதுவும் தெரிவிக்காது அவரைக் கைது செய்து கொண்டு சென்றதாக குடும்பத் தவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கைது செய்யப்பட்ட உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் சிவானந்தராசா-சிவநேசன் தலைமையில்
வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தால் ஆண்டு தோறும் நடாத்தப்படும் கழகங்களுக்கிடையேயான உதைபந்தாட்ட போட்டி நிகழ்வின் இவ்வாண்டுக்கான போட்டி நிகழ்வுகள் வத்திராயன் உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் காரணமின்றி திடீரென கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குடும்பத்தவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த வியாழக்கிழமை (28.09.2023) ஆரம்பமான குறித்த போட்டி நிகழ்வானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் மூத்த சட்டத்தரணிமான நடராஜர்-காண்டீபன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப நாள் நிகழ்வின் பதிவுகள்..

வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கைது ! 1

வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கைது ! 2

வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கைது ! 3

வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கைது ! 4

வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கைது ! 5

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments