வவுனியாவில் இரட்டைக்கொலை பெரும் பரபரப்பு!

You are currently viewing வவுனியாவில் இரட்டைக்கொலை பெரும் பரபரப்பு!

வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்களை சிறீலங்கா காவல்த்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக காவல்த்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை காவல்துறையினர், தலையில் பாரிய வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் அவசர உயிர்காவி வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்திசங்கத்தலைவரான கோபால் குகதாசன் 40 (4 பிள்ளைகளின் தந்தை), மற்றும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு மகேந்திரன் வயது 34 ஆகிய இருவர் சாவடைந்ததாக காவல்த்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

சுப்பிரமணியம் சிவாகரன் என்ற நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் மாணிக்கர் வளவில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் ஓமந்தை காவல்த்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள