வவுனியாவில் கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை யாழ்ப்பாணத்தில் மீட்பு!

You are currently viewing வவுனியாவில் கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை யாழ்ப்பாணத்தில் மீட்பு!

வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை பொலிஸாரினால் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. சிலையை கடத்தி வந்தவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் திருடப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை ஒன்று யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு பொலிஸார் சென்ற போது அதனை கடத்தி வந்தவர் தப்பித்தார். சிலை கைப்பற்றப்பட்டு யாழ்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments