விகாரைகள் மீது கைவைத்தால் வடக்கு கிழக்குக்கு வருகை தந்து தமிழர்களின் தலைகளை களனிக்குக் கொண்டு வருவேன் என சிங்கள அடிப்படைவாதி மேர்வின் சில்வா சூளுரைத்திருக்கிறார்.

You are currently viewing விகாரைகள் மீது கைவைத்தால் வடக்கு கிழக்குக்கு வருகை தந்து  தமிழர்களின் தலைகளை களனிக்குக் கொண்டு வருவேன் என சிங்கள அடிப்படைவாதி மேர்வின் சில்வா சூளுரைத்திருக்கிறார்.

சிறீலங்காவில் ஒளிபரப்பாகும் ஹிரு சிங்கள தொலைக்காட்சி ஊடகத்தின் செய்திச் சேவையில் அவர் நேரடிக் கருத்துரைக்கும் கானொளி இன்று [13.08.2023]ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டபோதே அவர் இந்தக் கடும் எச்சரிக்கை தொனியிலான இனவாதக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கானொளியில் கருத்துரைத்த மேர்வின் சில்வா நான் வடக்கு கிழக்கிற்கு வருவேன் நீங்கள் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் விகாரைகளைத்தடுக்க முற்பட்டால்,மகா சங்கத்தினர் மீது கை வைக்க முயன்றால் நான் களனிக்குச் சும்மா வர மாட்டேன் உங்களின் (வடக்கு கிழக்கில் உள்ளவர்கள்)தலைகளை கையில் சுமந்து கொண்டுதான் வருவேன் எனத் தெரிவிக்கும் குறும் கானொளி
மட்டும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இதேவேளை இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்ச காலத்தில் அமைச்சராக இருந்த சிங்கள அடிப்படைவாதி மேர்வின் சில்வா அக் காலப் பகுதியில் தமிழ் மக்களுக்கெதிராக இனவாதத்தை தூண்டியதுடன் அடாவடித்தனங்களையும் நிகழ்த்தியிருந்தார்.

தற்போதய மேர்வின் சில்வாவின் கருத்தானது இனங்களுக்கிடையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் கருத்தாகவே அமைந்துள்ளது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments