வீதிப் பிள்ளையாரை ஆக்கிரமித்த புத்தர்!

You are currently viewing வீதிப் பிள்ளையாரை ஆக்கிரமித்த புத்தர்!

முல்லைத்தீவு- புல்மோட்டை வீதியோரத்தில் இருந்த பிள்ளையார் கோவிலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

புல்மோட்டை-முல்லைத்தீவு வீதிகளின் சந்திப்பில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக முல்லைத்தீவு வீதியோரத்தில் இருந்த ஆலயத்தில் பிள்ளையார் சிலை மாத்திரம் இருந்துள்ளது.

இந்த ஆலயத்தில் பொது மக்கள் வழிபட்டு வந்த நிலையில், தற்போது திடீரென குறித்த ஆலயத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் உள்ள சைவ வழிபாட்டுத் தலங்களை சிங்கள மயமாக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

வீதிப் பிள்ளையாரை ஆக்கிரமித்த புத்தர்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments