வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 32 பேர் உட்பட இலங்கையில் மேலும் 2,361 பேருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

You are currently viewing வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 32 பேர் உட்பட இலங்கையில் மேலும் 2,361 பேருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் (ஜூன்-13) மேலும் 2,361 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கையர்களில் மேலும் 32 பேரும் புதுவருட கொத்தணியில் தொடர்புபட்டு 2,329 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் 2,031 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து இதுவரை குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 188,547 ஆக உயர்ந்துள்ளது.

புதிய கொவிட்-19 உயிரிழப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகாத நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 2,136 ஆக உள்ளது.

இதையடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 32,955 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments