175 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

You are currently viewing 175 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான 175 கிலோ கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களையும் டிங்கி படகு ஒன்றையும் கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பகுதியில் வடமத்திய சிறீலங்கா கடற்படை கட்டளை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 33 மற்றும் 34 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வங்காலைப்பாடு மற்றும் உதயபுரம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் சிறீலங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments