327 கோடி பெறுமதியான போதைபொருள் கைப்பற்றல்!

You are currently viewing 327 கோடி பெறுமதியான போதைபொருள் கைப்பற்றல்!

கடற்படையினர் ஆழ்கடலில் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின் போது 327 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் ஏழு பேரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே கடற்படையினர் ஆழ்கடலில் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமையவே இன்று சனிக்கிழமை முற்பகல் 9.54 மணிய ளவில் இந்த போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன எனக் கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது 260 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 56 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி சுமார் 327 கோடி ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள