அவசரமும் அவசியமுமான பெற்றோர் மக்களுக்கான பொதுக்கூட்டம்!

You are currently viewing அவசரமும் அவசியமுமான  பெற்றோர் மக்களுக்கான பொதுக்கூட்டம்!

அன்னைபூபதி றொம்மன் வளாக நடப்பாண்டு பெற்றோர் குழு விடுக்கும் அறிவித்தல்!

அன்பார்ந்த பெற்றோர்களே, பொதுமக்களே வணக்கம்!

அன்னை பூபதி Rommen வளாக நிர்வாகத்தின் சர்வாதிகாரப்போக்கு அதியுச்சநிலையில் தலைவிரித்தாடுவதை அனைவரும் அறிவீர்கள். வளாக நிர்வாகத்தால் 03.03.24 ஆண்டு நடத்தப்பட்ட பிரத்தியேக ஆண்டுக்கூட்டத்தில் அங்கத்தவர்களை கருத்துரைக்க விடாமல் முடக்கி யாப்பை மீறி, ஜனநாயகவிரோதமாக நடத்தி முடிக்கப்பட்டதை போலவே, எதிர்வரும் 09.03.24 நடத்துவதாக சொல்லப்படும் ஆண்டுக்கூட்டத்திலும் அங்கத்தவர்களின் குரலை முடக்கி, தனது அதிகாரத்தை தக்க வைக்க நிர்வாகம் முயற்சிக்கிறது.

ஜனநாயக விரோதமான / மக்கள் விரோத Rommen வளாக நிர்வாகத்தை ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டிய காலச்சூழ்நிலை இப்போது தோன்றியுள்ளது. இதனை எதிர்கொள்ள வேண்டிய மாபெரும் பொறுப்பை கொண்டுள்ள பெற்றோர்கள், அனுமதிக்கப்பட்ட ஜனநாயக வழியிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசர நிலையை கருத்தில் கொண்டு
இதற்கான ஆலோசனைகளை பகிர்ந்துகொள்வதற்கான பொதுமக்கள் சந்திப்பொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. Rommen வளாக பெற்றோர் / அங்கத்தவர்கள் மட்டுமல்லாது, அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட ஏனைய வளாகங்களின் பெற்றோர் / அங்கத்தவர்கள், வளாகங்களின் ஆசிரியர்கள், வளாகங்கள் மீது அக்கறையுடையவர்கள், வளாகங்களின் பழைய மாணவர்கள், ஆர்வமுள்ள பொதுமக்கள் என யாரும் கலந்துகொள்ளக்கூடியதாக ஒழுங்கமைக்கப்பட இருக்கும் இம்மக்கள் சந்திப்பானது, கீழ்க்காணும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறும்.

எமது எதிர்கால சந்ததியினருக்கு தவறான முன்னுதாரணங்களை விட்டுச்செல்லும் பாரிய வரலாற்று தவறை எதிர்த்துப்போராடுவதற்காக அனைவரும் இம்மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்க வேண்டுகிறோம்.

காலம்: 07.03.24
நேரம்: 19.00 – 21:00

Engel Paradise
Haavard Martinsens Vei 19
0978 Oslo

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments