ஆக்கிரமிப்பு புத்தர் சிலையை அகற்றப் போராடுவோம்!

You are currently viewing ஆக்கிரமிப்பு புத்தர் சிலையை அகற்றப் போராடுவோம்!

சுழிபுரத்தில் கடற்படையினரால் சவுக்கடிப் பிள்ளையார் கோயிலடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றக்கோரி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08.03.2024) மு.ப 10.30 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் சவுக்கடிப் பிள்ளையார் கோயில் முன்பாக நடைபெறவுள்ளது…
அனைவரும் திரண்டு பேராதரவு தருமாறு அன்புரிமையோடு வேண்டுகின்றோம்!

மண்ணைக் காக்க அனைவரும் திரள்வோம்!

க.சுகாஷ்,
பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிலையானது கடற்படையினரால் வைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் இது பின்னர் விகாரையாகத் தோற்றம் பெறலாம் எனவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆராய்ந்து, புத்தர் சிலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தமிழீழ தாயகத்தில் இது போலப் பல இடங்களில் சட்டவிரோத விகாரைகள் கட்டும் இனவெறியோடு அரசபடைகள் செயற்பட்டு வருகின்றன!

அந்த வகையில் புத்தரின் பெயரால் தமிழர் நிலங்கள் பறிக்கப்படும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக இனமானத் தமிழர்களாக ஒருமித்துக் குரல் கொடுத்துப் போராடுவோம்!

ஆக்கிரமிப்பு புத்தர் சிலையை அகற்றப் போராடுவோம்!

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments