இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – பாராளுமன்றில் கஜேந்திரன் எம்.பி!

You are currently viewing இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – பாராளுமன்றில் கஜேந்திரன் எம்.பி!

”இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.”
இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று சபையில் தெரிவித்தார். 

”இன அழிப்பு யுத்தத்தின்போது, மக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டது. இசைப்பிரியா போன்றவர்கள் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்டனர். பாலசந்திரன் போன்ற சிறார்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.
உணவு தட்டுப்பாடு மற்றும் மருந்து தட்டுப்பாடு என்பன இன அழிப்பு யுத்தத்தில் தமிழர்களுக்கு எதிரான ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டன.
எனவே, இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.
திட்டமிட்ட அடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படும். தமிழர்களிடமிருந்து தலைவர்களை தேடுங்கள், மாறாக முகவர்களை தேட வேண்டாம். எங்களது தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி தீர்வை முன்வைக்கவும்.” – என்றும் குறிப்பிட்டார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments