இலங்கையில் இம்மாதம் 22 நாட்களில் 500 கொரோனா மரணங்கள் பதிவு!

You are currently viewing இலங்கையில் இம்மாதம் 22 நாட்களில் 500 கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் இந்த மே மாதத்தில் நேற்று வரையான 22 நாட்களில் மட்டும் 500 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாண்டு கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் 30 வரையான நான்கு மாதங்களில் 474 மரணங்களே பதிவான நிலையில் இந்த மாதம் 22 நாட்களில் 500 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் புத்தாண்டுக் கொத்தணியுடன் தொற்று நோயின் மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ளது. அண்மைய நாட்களில் தினசரி 3,500 வரையான தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், கொரோனா மரணங்களும் விறு-விறுவென அதிகரித்து வருகின்றன. நாட்டில் இதுவரை இல்லாதளவு மிக அதிகளவாக நேற்று 46 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன.

நேற்று பதிவான மரணங்களுடன் இலங்கையில் உறுதி செய்யப்பட்ட மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,178 ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments